13/05/2021
🔥🔥🔥🔥
இந்த செய்தி மிகவும் வரவேற்க தக்கது.. இதை மேலோட்டமாக பார்த்தால் சாதாரண செய்தி போன்று தோன்றும்.. ஒரு கட்டிட பொறியாளராக என்னை மிகவும் நெருடிய ஒரு விசயம் இது.
பொதுவாக சாலைகள் என்பது போக்குவரத்துக்கு இன்றியமையாத ஒரு சாதனம் ஆகும். அந்த சாலைகளை குடியிருப்பு பகுதிகளில் போடப்படும் போது, நம் நாட்டில் சரியான ஒழுங்கு முறைகளை கடை பிடிப்பது இல்லை. குறிப்பாக சாலைகளின் உயரம்.
* இவர்கள் எப்போது சாலை போடுவார்கள்,
* அதன் தரம் என்ன?
* அந்த உயர்ந்த தரத்தால்😀, எவ்வளவு கால இடைவெளியில் போடுவார்கள்.,
என்று எல்லாம் தெரியாது.
ஆனால் சாலை போடும் பொழுது அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரை அடி முதல் 2 அடி வரை கூட உயர்த்துவார்கள்.
இவர்களின் இந்த அரிய மன நிலையை புரிந்து கொள்ள இயலாத நாம், ஒருவர் சாலையில் இருந்து 2 அடி தூக்கி வீடு கட்ட ஆரம்பிப்பார். அடுத்தவர் இவரை விட 1 அடியாவது உயரம் வேண்டும் என்பார். இப்படியே ஆளாளுக்கு வீட்டின் உயரத்தை அதிகப் படுத்திக் கொண்டே போவார்கள்.
இதனால் கட்டிடத்தின் பேஸ்மெண்ட் அதிகமாகி கட்டிட பொருள், ஆள் கூலி என்று ஒரு கணிசமான தொகை பேஸ்மெண்ட் க்கே செலவாகி விடும்.
அரசு இதை அறிவுறுத்த லோடு மட்டும் இல்லாமல், நன்கு ஆராய்ந்து இனி சாலைகளின் உயரத்தை அதிக படுத்தாமல் இருந்தால். வீடுகளின் உயரமும் ஒரே மாதிரி இருக்கும், தேவையற்ற செலவுகளை அரசும் சரி, மக்களும் சரி மிச்ச படுத்துவார்கள்..
By the way good initiative...👏🏿??🏿👏🏿👏🏿