நம்ம போடி

நம்ம போடி bodi photography

Permanently closed.
இது காட்டு மாடு மக்களை எப்படி இருக்கு பாருங்க
29/05/2026

இது காட்டு மாடு மக்களை எப்படி இருக்கு பாருங்க

இந்த இடத்தை நீங்கள்  சினிமா படத்தில் பார்த்திருக்க வாய்ப்பு அதிகம் நண்பர்களே 😌 (கவுண்டமணி காமெடி காட்சியில்)கிருஷ்ணகிரி ...
29/05/2026

இந்த இடத்தை நீங்கள் சினிமா படத்தில் பார்த்திருக்க வாய்ப்பு அதிகம் நண்பர்களே 😌 (கவுண்டமணி காமெடி காட்சியில்)

கிருஷ்ணகிரி மாவட்டம் பிலிகுண்டுவில் தான் இருக்கிறது இந்த இடம்.ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அதிகாரப்பூர்வ சுற்றுலாத்தலம் தான் இது.

காவிரி ஆற்றில் 15000 கன அடிக்கு மேல் தண்ணீர் செல்லும் போது தான் புகைப்படத்தில் பார்ப்பது போல் இருக்கும்.

ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்றால் இந்த இடத்தின் முழு அழகையும் ரசிக்கலாம்.

நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 30 ரூபாய் வசூலிக்கப் படுகிறது.குரங்குகள் தொல்லை அதிகம்.கவனம் தேவை.

புகைப்படத்தில் உள்ள இந்த இடம்,டிக்கெட் வாங்கிக் கொண்டு நேராக ஆற்றை நோக்கி 100 மீட்டர் நடக்க வேண்டும்.ஆற்றின் கரையை அடைந்தவுடன் இடது புறமாக கிழக்கு திசை நோக்கி 100 மீட்டர் சென்றால் இந்த இடத்தை அடையலாம்.

கீழே உடைந்த மது பாட்டில்கள் இருக்கும். 🩴 செருப்பு போட்டுக் கொண்டு நடக்கவும்,குளிக்கவும்.

மே மாதம் சென்றால் புகைப்படத்தில் இருப்பது போல் இந்த இடம் இருக்காது நண்பர்களே 😌 இந்தப் புகைப்படம் ஜூன் மாதத்தில் எடுத்தது.

கழிப்பறை வசதி,பார்க்கிங் வசதி எல்லாம் உள்ளது.பெட்ரோல் பங்க் வசதி இல்லை, மீன் கடைகள் உள்ளது,பரிசல் சவாரி உள்ளது,குழந்தைகள் விளையாட பார்க் வசதி உள்ளது,ஜியோ சிம் (டவர் கிடைக்காது) பாதுகாப்பாக சென்று பாதுகாப்பாக வாங்க நண்பர்களே.

29/05/2026
மேக தழுவலில்..
29/05/2026

மேக தழுவலில்..

😱
29/05/2026

😱

29/05/2026

திருப்பரங்குன்றம்
Follow Us :

யானைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்றவற்றை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவையாகும...
29/05/2026

யானைகள் பல கிலோ மீட்டருக்கு அப்பால் ஏற்படும் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்றவற்றை எளிதில் கண்டறியும் திறன் கொண்டவையாகும். யானை குட்டி பிறந்து சுமார் 2 மணி நேரத்திலேயே நடக்க ஆரம்பித்து விடும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டும் மதம் வெளிப்படும். யானைகள் அதன் வழித்தடங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும். ஓராண்டில் சுமார் 500 முதல் 750 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் இடப்பெயர்ச்சி செய்யும்.

யானைகளின் சானத்தின் மூலம் 50-க்கும் மேற்பட்ட தாவர விதைகளை காடுகளில் பரப்புகின்றன.

சானத்தில் உள்ள பலவகை பூச்சியினங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. கரையான்களுக்கு உகந்த உணவாக யானை சானம் உள்ளது.

யானைகள் செல்லும் பாதைகளை பயன்படுத்திதான் புலி, சிறுத்தைப்புலி, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் ஓர் இடம் விட்டு இடம் நகருகின்றன.

யானைகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. இவற்றின் செரிமானத்திறன் மிகவும் மந்தமானது.

எனவே, யானைகள் உண்ணும் உணவில் 40 சதவீதமே செரிமானம் ஆகும். நன்கு வளர்ந்த யானைகள், நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானைகளின் சராசரி ஆயுட்காலம் 80 முதல் 90 ஆண்டுகள் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது அத்தனை ஆண்டுகள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் யானைகள் வாழ்வது மிகக் கடினமாக உள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் யானைகள் வாழ்வதற்கு உகந்த இடமாக உள்ளது. எனவே இந்த மலையில் உள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை (வால்பாறை), மேகமலை, களக்காடு-முண்டந்துறை பகுதிகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன. தமிழக கேரளா மலையோர நெல்லியம்பதி, மூணாறு, சின்னாறு, கவி வனங்களிலும் காணலாம்

எந்த ஒரு வனப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ அந்த வனப்பகுதி வளமான வனப்பகுதியாக இருக்கும் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் மிக வளமான வனப்பகுதிகளான முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை ஆகிய இடங்களில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன.

😍🤩
28/05/2026

😍🤩

எந்த இடம் என்று கண்டுபிடியுங்கள்? பாக்கலாம்...
28/05/2026

எந்த இடம் என்று கண்டுபிடியுங்கள்? பாக்கலாம்...

,🥰🥰🥰
28/05/2026

,🥰🥰🥰

🦜பச்சைக்கிளியை வேட்டையாடி உண்ணும் வைரி பறவை😮 Shikra hunted Rose Ringed Parakeet💚வன உயிரினங்கள் அனைத்துமே உணவுக்காக மற்ற ...
27/05/2026

🦜பச்சைக்கிளியை வேட்டையாடி உண்ணும் வைரி பறவை😮 Shikra hunted Rose Ringed Parakeet💚

வன உயிரினங்கள் அனைத்துமே உணவுக்காக மற்ற உயிரினங்கள் மற்றும் செடி கொடிகளை சார்ந்து இருக்கும், அதில் குறிப்பாக வேட்டை பறவைகள் அனைத்தும் மற்ற பறவைகளை பசிக்காக வேட்டையாடி உணவாக உட்கொண்டு உயிர் வாழும் இதனால் மற்ற பறவைகளின் எண்ணிக்கை சமநிலையில் இருப்பதற்கு வேட்டை பறவைகள் அனைத்தும் முக்கியமான பங்கு வகித்து வருகிறது, இது போன்ற நிகழ்வுகள் நம் கண்ணில் பட்டால் கண்டிப்பாக அதை நாம் தடுக்க கூடாது, இது இயற்கையாக நடக்கும் ஒரு செயல் இயற்கையின் உணவு சங்கிலி எனப்படும் நம் உலகம் செழிப்பாக இயங்குவதற்கு இந்த உணவு சங்கிலி தான் முக்கியமான காரணம், அதில் சில பேர் பாவப்பட்டு இதுபோன்ற நிகழ்வுகள் கண்முன் நடக்கும் பொழுது காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் வேட்டை பறவைகள் மற்றும் பல உயிரினங்களின் உணவை கெடுத்து விடுகின்றனர், அதனால் இது போன்ற நிகழ்வு நம் கண் முன் நிகழ்ந்தால் அவற்றை தொந்தரவு செய்யாமல் தூரத்தில் இருந்து பார்க்கலாம் அல்லது பார்க்க மனம் இல்லாதவர்கள் விலகிச் செல்லலாமே தவிர இந்த உணவை தடுக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம், இயற்கையில் அனைத்து வன உயிரினங்கள் மற்றும் செடி கொடிகள் தான் இந்த உலகம் சிறப்பாக இயங்குவதற்கு முக்கியமான பங்கு வகித்து வருகிறது இயற்கைக்கு மனிதர்கள் எந்த ஒரு இடையூறும் செய்யாமல் இருந்தாலே போதும் உலகம் அதே போல் சிறப்பாக இயங்கும் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

Address

Theni
625513

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம போடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share